நாள்தோறும் நம்மாழ்வார்

மூன்றாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

திருவேங்கடத்தில் உறைகின்ற எம்பெருமானை

செ.குளோரியான்

சோதிஆகி எல்லா உலகும் தொழும்
ஆதிமூர்த்தி என்றால் அளவுஆகுமோ
வேதியர் முழுவேதத்து அமுதத்தைத்
தீதுஇல் சீர்த் திருவேங்கடத்தானையே?

அந்தணர்களின் செல்வமான வேதத்தில் சொல்லப்படும் அமுதம், குற்றமில்லாத சிறப்பைக்கொண்ட திருவேங்கடத்தான், எம்பெருமான், அவனை, 'சோதிவடிவாக எல்லா உலகங்களாலும் தொழப்படுகிறவன், அனைத்துக்கும் மூலமான ஆதிமூர்த்தி' என்று சொன்னால் போதுமா? (போதாது, அவன் புகழை இன்னும் பலவிதமாக உரைக்க வேண்டும்!)

•••

பாடல் - 6

வேம்கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆஅம் கடமை அது சுமந்தார்கட்கே.

திருவேங்கடத்தில் உறைகின்ற எம்பெருமானை வணங்கி அவனுடைய பெயரைப் போற்றுவது நமது கடமையாகும், இக்கடமையை ஏற்றுக்கொண்டு செய்கிறவர்கள் இதற்குமுன் சேர்த்த கடன்கள் தீரும், இனி வரக்கூடிய வினைகள் யாவும் வெந்துபோகும், அவன் பெயரைச் சொல்வதன் மூலம் அவர்கள் தங்களுக்குத் தாங்களே நன்மைசெய்துகொள்வார்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT