நாள்தோறும் நம்மாழ்வார்

எட்டாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 11

செம்பொன் திருவடிகளின்கீழ்

செ.குளோரியான்

பாடல் 11

தெருளும் மருளும் மாய்த்துத் தன்
திருந்து செம்பொன் கழல் அடிக்கீழ்
அருளி இருத்தும் அம்மானாம்
அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப்பட்ட சடகோபன்
ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
அருளி அடிக்கீழ் இருத்தும் நம்
அண்ணல் கருமாணிக்கமே.

ஞானம், அஞ்ஞானம் ஆகியவை மாறி மாறி வருகிற நிலையைக் கெடுத்துப் பக்தர்களைத் தன்னுடைய அழகிய, செம்பொன் திருவடிகளின்கீழ் அமர்த்துகின்ற அம்மான், பிரம்மனாகவும் சிவனாகவும் திகழ்கிற திருமாலின் அருளைப்பெற்ற சடகோபர் ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாட வல்லவர்களுக்கு நம் அண்ணலாகிய கருமாணிக்கம் அருள்செய்வார், தன்னுடைய திருவடிகளின்கீழ் இருத்துவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT