நாள்தோறும் நம்மாழ்வார்

எட்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 11

நாயகன் எம்பெருமான்

செ.குளோரியான்


பாடல் 11


நேர்பட்ட நிறை மூ உலகுக்கும்
நாயகன் தன் அடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர்
தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ்மாலை ஆயிரத்துள்
இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு
அடிமை செய்யவே.

நிறைந்த மூன்று உலகங்களுக்கும் வாய்த்த நாயகன் எம்பெருமான், அவனுடைய அடிமையாகும் தகுதியைக்கொண்ட தொண்டர்களுடைய தொண்டர்களுடைய தொண்டர்களுடைய தொண்டன் சடகோபன். அந்தச் சடகோபன் சொன்ன தமிழ்மாலை ஆயிரத்திலே இந்தப் பத்து பாடல்களையும் யார் பயில்கிறார்களோ, அவர்கள் நெடுமாலுக்கு அடிமையாகும் சிறப்பைப் பெறுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT