நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 11

குருகூர்ச் சடகோபன்

செ.குளோரியான்

பாடல் - 11

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே
           துணிந்து
தாது சேர் தோள் கண்ணனைக் குருகூர்ச் சடகோபன்
           சொன்ன
தீது இலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள்
           இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள்
           பண்டே.

எம்பெருமானைத்தவிர வேறு யாரும் நமக்கில்லை என்பதை அறிந்து, மாலை அணிந்த திருத்தோள்களையுடைய அந்தக் கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் குற்றமில்லாத, அழகிய தமிழில் ஆயிரம் பாடல்களில் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் ஓதவல்லவர்கள் ஏற்கெனவே நம்மை அடிமையாக்கிக் கொண்டு விட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT