நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் - 8

காளையாகிய எம்பெருமான்

செ.குளோரியான்


பாடல் - 8

கடுவினை களையல் ஆகும், காமனைப் பயந்த காளை
இடவகை கொண்டது என்பர், எழில் அணி அனந்தபுரம்,
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ, நமர்கள் உள்ளீர், நாம் நமக்கு அறியச் சொன்னோம்.

நம்மவர்களே, மன்மதனைப் பெற்ற காளையாகிய எம்பெருமான் விரும்பி அருள்புரியும் திருத்தலம், அழகிய திருவனந்தபுரம், அங்கே படமுடைய பாம்பாகிய ஆதிசேஷன்மீது பள்ளிகொண்ட எம்பெருமானுடைய திருவடிகளைக் காண நடந்துவாருங்கள், அத்திருப்பாதங்களைக் கண்டு வணங்கினால், கொடிய வினைகளையெல்லாம் களைந்துவிடலாம், இதை நீங்கள் அறியும்படி நான் சொல்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT