நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் - 10

சொல்லிப் போற்றினால்

செ.குளோரியான்


பாடல் - 10

மாய்ந்து அறும் வினைகள் தாமே, மாதவா என்ன நாளும்,
ஏய்ந்த பொன் மதிள் அனந்தபுர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம், தூபம், தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்துகொண்டு ஏத்தவல்லார் அந்தம்இல் புகழினாரே.

‘மாதவா’ என்று நாள்தோறும் சொல்லிப் போற்றினால், நம்முடைய வினைகள் தாமே தொலைந்துவிடும். பொருந்திய பொன்னால் ஆன மதிள் சுவரால் சூழப்பட்ட திருவனந்தபுரத்திலே அருள்தருகிறவர் நம் தந்தை, அவருக்காகச் சந்தனமும் விளக்கும் தூபங்களும் தாமரை மலர்களும் சிறந்தவையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவந்து அவரைப் போற்றவல்லவர்கள் எல்லையில்லாத புகழை அடைவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT