நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 9

எங்களுக்கும் மகிழ்ச்சி

செ.குளோரியான்


பாடல் 9

உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன்தன்
திருவுள்ளம் இடர் கெடும்தொறும் நாங்கள்
வியக்க இன்புறுதும், எம் பெண்மை ஆற்றோம்,
எம்பெருமான், பசு மேய்க்கப் போகேல்,
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
நின்று உழிதருவர் கஞ்சன் ஏவ,
அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே
அவத்தங்கள் விளையும், என் சொற் கொள், அந்தோ.

எம்பெருமானே, உனக்குப் பிடித்த நல்லவர்களோடு இங்கே வா, உன் விருப்பம்போல் இங்கேயே திரிந்துகொண்டிரு, உன்னுடைய திருவுள்ளத்துக்கு எது மகிழ்ச்சியோ அதுவே எங்களுக்கும் மகிழ்ச்சி, எங்களுடைய பெண்மை அதை ஏற்றுக்கொள்ளும், பெருமானே, நீ பசு மேய்க்கச் செல்லவேண்டாம், கம்சனுடைய ஏவலின்படி அங்கே பல அசுரர்கள் வெவ்வேறு உருவத்தில் வந்து திரிவார்கள், அவர்களிடம் நீ அகப்பட்டால் உங்களுக்கிடையே கொடிய போர் உண்டாகும், துன்பம் ஏற்படும், ஆகவே, என் சொல்லைக் கேள், பசு மேய்க்கப் போகாதே, அடடா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT