நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 11

பரம்பொருளாகிய எம்பெருமானை

செ.குளோரியான்

பாடல் 11

பற்று என்று பற்றிப் பரம பரம்பரனை,
மல் திண் தோள் மாலை, வழுதி வளநாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்று ஆகும் கண்ணன் கழல் இணையே.

உயர்ந்தவற்றுள் மிக உயர்ந்த பரம்பொருளாகிய எம்பெருமானை, மிடுக்கான, திண்மையான திருத்தோள்களையுடைய திருமாலைப் பற்றாகப் பற்றினார் வழுதி வளநாடன், எம்பெருமானைப் போற்றி ஓர் ஆயிரம் அந்தாதிப் பாடல்களைச் சொல் மாலையாகத் தொடுத்தார். அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் கற்றவர்களுக்கு அந்தக் கண்ணனின் கழலணிந்த திருவடிகளே பற்றுக்கோடாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT