நாள்தோறும் நம்மாழ்வார்

ஏழாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 11

வேறேதும் இல்லை

செ.குளோரியான்


பாடல் - 11

இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குருகூர்ச் சடகோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.

இந்த உலகத்திலும், பரமபதத்திலும் திருமாலைத்தவிர வேறேதும் இல்லை என்பதைக் கண்டு, அப்பெருமானின் தன்மையை அறிந்துகொண்டார் வளம் நிறைந்த குருகூர்ச் சடகோபன். அவர் அந்தத் தன்மையை ஆயிரம் திருப்பாடல்களாகப் பாடினார். அவற்றுள் இந்தப் பத்து திருப்பாடல்களையும் எந்தமுறையில் சொன்னாலும் இறைவன் அனுபவம் என்கிற இன்பம் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT