நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 9

நோய்கள் தீரும்

செ.குளோரியான்


பாடல் - 9

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி,
ஏதம் சாரா, எனக்கேல் இனி என் குறை?
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே.

எம்பெருமானின் திருவடிகளை ஒவ்வொரு நாளும் வணங்கினால் நோய்கள் தீரும், பாவங்கள் நெருங்காது, இனி எனக்கு என்ன குறை? (ஏதுமில்லை.) வேதங்களை ஓதுகின்றோர் விரும்புகின்ற திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கும் ஆதிப் பெருமான், அவரை அடைந்தவர்களுக்கு அல்லல்கள் ஏதும் இல்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT