நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து முதல் திருவாய்மொழி  - பாடல் 5

உலகங்களையும் அளந்தவன்

செ.குளோரியான்


பாடல் 5

தொண்டீர், வம்மின், நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்,
அண்டம், மூ உலகு அளந்தவன் அணி திருமோகூர்
எண் திசையும் ஈன் கரும்பொடு பெரும் செந்நெல் விளையக்
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே.

தொண்டர்களே, நம்முடைய பெருமான், சுடரொளியாகத் திகழும் இணையற்ற தனி முதல்வன், அண்டங்களையும் மூன்று உலகங்களையும் அளந்தவன் எழுந்தருளியிருக்கும் அழகிய திருமோகூருக்குச் செல்வோம், எட்டுத் திசைகளிலும் கரும்போடு பெரிய செந்நெல் செழித்து விளைகின்ற சூழலில் அமைந்த எம்பெருமான் திருக்கோயிலைச் சுற்றிவந்து கூத்தாடுவோம், வாருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT