நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் - 2

எம்பெருமானை வணங்குங்கள்

செ.குளோரியான்


பாடல் - 2

இன்று போய்ப் புகுதிர் ஆகில், எழுமையும் ஏதம் சாரா,
குன்றுநேர் மாடம் மாடே குருந்து சேர் செருந்தி, புன்னை
மன்று அலர் பொழில் அனந்தபுரநகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கு உம்பர் ஊரே.

எம்பெருமான் அருள்புரியும் திருவனந்தபுரத்துக்கு இன்றே செல்லுங்கள், எம்பெருமானை வணங்குங்கள், உங்களுக்கு ஏழேழ் பிறவிகளிலும் எந்தத் துன்பமும் வராது. குன்றுகளைப்போன்ற மாடங்களுக்கு அருகே குருந்தமரங்கள், செருந்திமரங்கள், புன்னைமரங்கள் போன்றவை நறுமணத்தோடு மலர்கின்ற திருவனந்தபுரத்துப் பெருமான், மாயனுடைய திருப்பெயர்களில் ஏதேனும் ஒன்றை நினைத்தாலே போதும், அது ஆயிரம் திருப்பெயர்களைச் சொன்ன பலனைத் தரும், பரமபதம் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT