நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் - 3

கருடனை வாகனமாகக்

செ.குளோரியான்


பாடல் - 3

ஊரும் புள், கொடியும் அஃதே, உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண் அனந்தபுரம் சிக்கெனப் புகுதிர் ஆகில்,
தீரும் நோய், வினைகள் எல்லாம், திண்ணம், நாம் அறியச்சொன்னோம்,
பேரும் ஓர் ஆயிரத்துள் ஒன்று நீர் பேசுமினே
.

எம்பெருமான் கருடனை வாகனமாகக் கொண்டவர், அவருடைய கொடியும் கருடன்தான். அவர் உலகையெல்லாம் உண்டு, உமிழ்ந்தவர், அத்தகைய பெருமான் சேர்ந்திருக்கும் திருவனந்தபுரத்துக்கு விரைவில் சென்று வணங்குங்கள், அவருடைய ஆயிரம் திருப்பெயர்களில் ஒன்றைப் பேசி வணங்குங்கள், அப்படி வணங்கினால் உங்களுடைய நோய்கள், வினைகள் அனைத்தும் தீர்ந்துபோகும், இது நிச்சயம், இதனை எல்லாரும் அறியும்படி நாம் சொன்னோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT