ஒன்பதாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 9
தெய்வங்களிலே கடலைப்போன்றவர்
பாடல் - 9
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண், கனி வாயது ஓர்
கார் எழில் மேகத் தென்காட்கரை கோயில்கொள்
சீர் எழில் நால் தடம்தோள் தெய்வ வாரிக்கே.
பெரிய இதழ்களைக்கொண்ட தாமரையைப்போன்ற திருக்கண்கள், கனிபோன்ற திருவாயைக்கொண்ட ஒரு கருத்த, அழகான மேகம், திருக்காட்கரையிலே கோயில் கொள்ளும் சிறந்த, அழகிய, நான்கு பெரிய தோள்களைக்கொண்ட பெருமான், தெய்வங்களிலே கடலைப்போன்றவர், அவரால் என் உயிர் அனுபவித்த பாடுகளை வேறு யாருடைய உயிர் அனுபவித்தது?