நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 8

அனைத்துக்கும் முதலானவனே

செ.குளோரியான்

பாடல் 8

பெற்று, இனிப் போக்குவனோ உன்னை, என் தனிப்
பேருயிரை, உற்ற இருவினையாய், உயிராய், பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய், தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய், என் முதல் தனி வித்தேயோ.

நல்வினை, தீவினை என அமைகிற இருவினைகளாக, உயிராக, வினைகளின் பயனாக, இந்த மூன்று உலகங்களிலும் முழுக்கப் பரவியிருக்கும் சம்சாரம் என்கிற புதராக, அந்தப் புதரிலே புகுந்து யாரும் அறியாதபடி ஒளிந்திருப்பவனாகத் திகழ்கிறவனே, என்னுடைய முதல் தனி வித்தே, (அனைத்துக்கும் முதலானவனே, என்னுடைய தனித்துவமான பேருயிராக உன்னைப் பெற்றேன், இனி விடுவேனா? (மாட்டேன்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT