நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 10

சூழ்ந்து, அகன்று

செ.குளோரியான்

பாடல் 10

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவுஇல் பெரும் பாழேயோ,
சூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர்ச் சோதீயோ,
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ,
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே.

சூழ்ந்து, அகன்று, ஆழ்ந்து, உயர்ந்த, முடிவற்ற, பெரிய மூலப்பகுதியாகத் திகழ்கிறவனே, அதைச் சூழ்ந்திருக்கிற, அதைவிடப் பெரிய, உயர்ந்த, நல்ல, மலர்ச்சோதிவடிவானவனே, அதைச் சூழ்ந்திருக்கிற, அதைவிடப் பெரிய, சுடர்விடும் ஞான இன்பமானவனே, அதைச் சூழ்ந்திருக்கிற, அதைவிடப் பெரிய என்னுடைய ஆசை தீரும்படி என்னைச் சூழ்ந்தாயே.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT