நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 3

திருவடிகளைப் பிடித்தேன்

செ.குளோரியான்


பாடல் 3

பிடித்தேன், பிறவி கெடுத்தேன், பிணி சாரேன்,
மடித்தேன் மனைவாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை,
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான்
அடிச் சேர்வது என் எனக்கு எளிது ஆயினவாறே.

எம்பெருமானின் திருவடிகளைப் பிடித்தேன், அவருடைய அருளாலே என்னுடைய பிறவி நோயைப் போக்கிக்கொண்டேன், இனி எனக்கு நோய்கள் வராதபடி செய்துகொண்டேன், குடும்ப வாழ்க்கையிலே இருக்கிற மாயையை விலக்கிக்கொண்டேன், கொடிகள் பறக்கும் கோபுரங்களோடு மாடங்கள் சூழ்ந்த திருப்பேரிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் திருவடிகளைச் சேர்வது எனக்கு எளிதாக இருக்கிறதே, இது என்ன அதிசயம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT