பாடல் 5
வானே தருவான் எனக்காய் என்னோடு ஒட்டி
ஊன் ஏய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேன் ஏய் பொழில் தென் திருப்பேர் நகரானே.
வண்டுகள் நிறைந்த சோலைகளையுடைய தென் திருப்பேர் நகரிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் எனக்குப் பரமபதத்தைத் தருவான், அத்தகைய எம்பெருமான், என்னோடு ஒட்டினான், மாமிசமாகிய இந்த உடலினுள் புகுந்தான், அவனைப் பிரிந்து நான் தடுமாறும்படி செய்யக்கூடிய வினைகளைத் தடுத்தான். (நான் எப்போதும் அவனை நினைத்துக்கொண்டிருக்கும்படி செய்தான்.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.