நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 10

நிறைந்த குடங்கள்

செ.குளோரியான்

பாடல் 10

விதிவகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்,
நிதியும், நல் சுண்ணமும், நிறை குட விளக்கமும்
மதிமுக மடந்தையர் ஏந்தினர் வந்தே.

வேதங்களிலே கூறப்பட்ட நித்தியசூரிகள், எம்பெருமான் அடியவர்களைக் கண்டு, ‘நம்முடைய பாக்கியத்தாலே இவர்கள் இங்கே வந்தார்கள்’ என்று மகிழ்ந்தார்கள், தங்கள் இடங்களில் செய்யப்படவேண்டிய முறைப்படி அவர்களுடைய பாதங்களைக் கழுவினார்கள், சந்திரனைப்போன்ற முகத்தையுடைய பெண்கள், நிதி எனப்படும் திருவடிநிலைகள், நல்ல வாசனைப்பொடி, நிறைந்த குடங்கள், விளக்குகளை ஏந்திவந்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசியா அலுவலகக் கட்டடத்தில் தீ விபத்து! 22 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்!

கவர்ச்சிப் பெண்ணின் மாய வாழ்க்கை... மௌனி ராய்!

வெறும் சூரிய ஒளியில்தான்... ரித்தி டோக்ரா!

வ.உ.சி., பாரதி பெயர்கள் வட இந்திய சாலைகளுக்கு வைக்காதது ஏன்? திருச்சி சிவா

வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் ஒருபோதும் நமது ஹீரோக்களாக இருக்கமுடியாது: ஆதித்யநாத்

SCROLL FOR NEXT