நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல்  2

மாயம் செய்யாதே

செ.குளோரியான்

பாடல்  2

மாயம் செய்யேல் என்னை, உன் திருமார்வத்து மாலை நங்கை
வாசம்செய் பூங்குழலாள் திரு ஆணை, நின் ஆணை கண்டாய்,
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறு இன்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய், என்னைக் கூவிக்கொள்ளாய் வந்து, அந்தோ.

எம்பெருமானே, என்னிடம் மாயம் செய்யாதே, உன்னுடைய திருமார்பில் மாலைபோல் விளங்குகிற நங்கை, வாசனை நிறைந்த பூங்குழலைக்கொண்ட திருமகள்மீது ஆணை, உன்மீது ஆணை, என்னை நேசித்து, என்னுடைய உயிரை வேறோர் உயிராகக் கருதாமல், வெறுக்காமல் உன்னோடு என்னை ஒன்றாக ஏற்றுக்கொண்டாய், இங்கே வந்து என்னை உன்னோடு கூவி அழைத்துக்கொள், அடடா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT