நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 1

சிவபெருமானுக்குள் இருப்பவனே

செ.குளோரியான்

பாடல் 1

முனியே, நான்முகனே, முக்கண் அப்பா, என் பொல்லாக்
கனி வாய்த் தாமரைக்கண் கரு மாணிக்கமே, என் கள்வா,
தனியேன் ஆர் உயிரே, என் தலைமிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன், ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே.

மனத்தால் அனைத்தையும் படைப்பவனே, நான்முகனுக்குள் இருப்பவனே, மூன்று கண்களையுடைய சிவபெருமானுக்குள் இருப்பவனே, கனிபோன்ற திருவாயைக்கொண்டவனே, தாமரைபோன்ற திருக்கண்களைக்கொண்டவனே, என்னுடைய துளையிடப்படாத கருமாணிக்கமே, என் கள்வனே, தனித்திருக்கும் என்னுடைய அரிய உயிரே, என் தலைமீது உன்னுடைய திருவடிகளை வைத்தாய், இனி நான் வேறெங்கும் போகமாட்டேன், என்னிடம் ஏதும் மாயம் செய்யாதே. (எப்போதும் என்னுடன் இரு.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT