நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 6

எனக்கு அன்பானவனே

செ.குளோரியான்

பாடல் 6

எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன் உயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய், இனி உண்டொழிவாய்,
புனக் காயா நிறத்த புண்டரீகக் கண், செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா, என் அன்பேயோ.

புனத்திலே பூத்த காயாம்பூவைப்போன்ற நிறத்தைக்கொண்டவனே, தாமரைபோன்ற திருக்கண்கள், செங்கனிபோன்ற திருவாயைக்கொண்டவனே, உனக்கு ஏற்ற அழகைக்கொண்டவள், பூவிலே எழுந்தருளியிருக்கும் திருமகளின் அன்பனே, எனக்கு அன்பானவனே, என்னுடைய ஆரா அமுதமான நீ எனக்குள் பெரும் விருப்பத்தை உண்டாக்கி என்னுடைய ஆவியை, இனிய உயிரை உண்டாய், இனியும் அவ்வாறே உண்பாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT