நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 1

திருவடிகளை வணங்கு

செ.குளோரியான்

பாடல் 1

அருள் பெறு அடியார்தம் அடியனேற்கு ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான், அது நமது விதிவகையே,
இருள் தரு மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்,
மருள் ஒழி நீ, மடநெஞ்சே, வாட்டாற்றான் அடி வணங்கே.

எம்பெருமானின் அருளைப் பெறுகின்ற அடியவர்களுக்கு நான் அடியவன். ஆகவே, சக்ராயுதத்தை ஏந்திய எம்பெருமான் எனக்கும் அருள்செய்கின்றான், அது நம்முடைய விதிவகையாகும், இருளை (அறியாமையை)த் தருகிற இந்தப் பெரிய உலகத்திலே இன்னொருமுறை பிறவியெடுக்க நான் விரும்பவில்லை, அறியாமை நிறைந்த நெஞ்சமே, நீ பலவற்றை யோசித்து மயங்காதே, திருவாட்டாற்றில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் திருவடிகளை வணங்கு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT