நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 3

விதிப்படியே நடப்பதாகும்

செ.குளோரியான்


பாடல் 3

நண்ணினம் நாராயணனை, நாமங்கள் பல சொல்லி,
மண் உலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண் உலகம் தருவானாய் விரைகின்றான், விதிவகையே,
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே!

என் நெஞ்சே, எம்பெருமான் நாராயணனின் பல திருப்பெயர்களைச் சொல்லி நாம் வணங்கினோம், அப்பெருமானை நெருங்கினோம், இன்றைக்கு, எம்பெருமான் மண்ணுலகிலே வளங்கள் நிறைந்த திருவாட்டாற்றுக்கு விரைந்து வருகிறான், நமக்குப் பரமபதத்தைத் தருவதற்காகவே அவன் இவ்வாறு வந்திருக்கிறான், இதுவும் நம்முடைய விதிப்படியே நடப்பதாகும், நெஞ்சே, இவ்வாறெல்லாம் நடக்கும் என்று நாம் எண்ணியிருப்போமா? (நாம் எண்ணியதைவிடச் சிறப்பாக இவை நடந்துவிட்டனவே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT