நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 5

உனக்கென்ன அச்சம்?

செ.குளோரியான்


பாடல் 5

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன், நரகத்தை நகு நெஞ்சே,
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ்பாதன், செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாள் இணை என் தலைமேலே.

பரமபதத்தை அடைவதற்கு வழி தந்த எம்பெருமான், திருவாட்டாற்றிலே எழுந்தருளியிருக்கும் இறைவன் சொன்னபடி நான் பரமபதத்தை அடைகிறேன், தேன் நிறைந்த மலர்களைக்கொண்ட திருத்துளவம் திகழ்கிற திருவடிகளை உடையவன், செழுமையான பறவையாகிய கருடனின்மீது ஏறி ஊர்ந்துசெல்பவனுடைய திருவடிகளை என் தலைமீது சூடிக்கொண்டேன். நெஞ்சமே, இனி நரகத்தை எண்ணி உனக்கென்ன அச்சம்? அதைப் பார்த்துச் சிரிப்பாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT