நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 1

எம்பெருமானுக்கு ஆட்செய்யுங்கள்

செ.குளோரியான்

பாடல் 1

செஞ்சொற் கவிகாள், உயிர்காத்து ஆட்செய்மின், திருமாலிருஞ்சோலை
வஞ்சக் கள்வன், மாமாயன் மாயக்கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள்கலந்து, நின்றார் அறியாவண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே ஆகி நிறைந்தானே.

சிறந்த சொற்களைக்கொண்டு கவிதைகளை எழுதும் கவிகளே, உங்களுடைய உயிரைக் காத்துக்கொண்டு எம்பெருமானுக்கு ஆட்செய்யுங்கள், திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கும் வஞ்சக் கள்வர், சிறந்த மாயங்களைப் புரிபவர், மாயக்கவியாக வந்து என் நெஞ்சிலும் உயிரிலும் உள்ளே கலந்தார். தன்னருகே நிற்பவர்கள்கூட அறியாதவண்ணம் என் நெஞ்சையும் உயிரையும் உண்டு, அவை அனைத்தும் தானாகவே ஆகி நிறைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT