நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 8

திருமாலிருஞ்சோலை மலையையும்

செ.குளோரியான்

பாடல் 8

திருமாலிருஞ்சோலை மலையே, திருப்பாற்கடலே, என் தலையே,
திருமால் வைகுந்தமே, தண் திருவேங்கடமே, எனது உடலே,
அரு மா மாயத்து எனது உயிரே, மனமே, வாக்கே, கருமமே,
ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே.

எம்பெருமான், என்னுடைய ஊழி முதல்வன் (ஊழிக்காலத்துக்கு முன்பு இருந்தவன், அனைத்துக்கும் முதலானவன்), தனித்துவமானவன், அத்தகைய பெருமான், திருமாலிருஞ்சோலை மலையையும் திருப்பாற்கடலையும், திருமாலின் வைகுந்தத்தையும், குளிர்ந்த திருவேங்கட மலையையும் பிரிவதில்லை, அதுபோல, அவன் என்னுடைய தலையை, உடலை, அரிய, பெரிய மாயமாகிய என் உயிரை, மனத்தை, சொற்களை, செயல்களையும் பிரிவதில்லை, ஒரு சிறிய நொடிப்பொழுதும் என்னைப் பிரியாமல் அருள்புரிகிறான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT