முகப்பு
தினம் ஒரு தேவாரம்

5. சுண்ண வெண்சந்தனச் சாந்தும் - பாடல் 7

ஒரு காதினில் தோட்டினையும் மற்றொரு காதினில் குழையினையும் அணிந்த உருவமாக சிவபிரானை அப்பர் பிரான் காண்பதை நாம் இந்தப் பாடலில் உணரலாம்.

Updated On : 2 நவம்பர், 2015 at 5:44 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:00 PM

கொலை வரி வேங்கை அதளும் குவவோடு இலங்கு பொன் தோடும்
விலை பெறு சங்கக் குழையும் விலையில் கபாலக் கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணி ஆர்ந்து இலங்கு மிடறும்
உலவு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

<strong><br /></strong> </p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">அதள் = தோல். குவவு = திரட்சியாக உள்ள தோள். விலை பெறு = மிகுந்த மதிப்பினை உடைய. விலையில் = விலை மதிப்பில்லாத.</p><p align="JUSTIFY">ஒரு காதினில் தோட்டினையும் மற்றொரு காதினில் குழையினையும் அணிந்த உருவமாக சிவபிரானை அப்பர் பிரான் காண்பதை நாம் இந்தப் பாடலில் உணரலாம்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">தன்னால் கொல்லப்பட்ட கோடுகளை உடைய புலித்தோலை உடையவரும், தனது திரண்ட தோள்களின் மீது படுமாறுத் தொங்கும் தோட்டினை உடையவரும், விலை உயர்ந்த சங்கக் குழையினை காதினில் அணிந்தவரும் விலையே இல்லாத மண்டையோடாகிய உணவுக்கலனை உடையவரும், மலைமகள் தங்கும் இடமாகக் கொண்ட மார்பினை உடையவரும், நீலமணியின் நிறத்தோடு திகழும் கழுத்தினை உடையவரும், கெடில நதியினை தீர்த்தமாக உடையவரும் ஆகிய சிவபிரானின் அடியவனாகிய ஆகிய நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய பொருள் இனித் தோன்றப்போவதும் இல்லை</p><p align="JUSTIFY"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.