முகப்பு
தினம் ஒரு தேவாரம்

7. வெறிவிரவு கூவிள - பாடல் 7

குண்டாக்கனாய் உழன்று கையில் உண்டு குவி முலையார் தம் முன்னே நாணமின்றி

Updated On : 20 நவம்பர், 2015 at 12:16 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:09 PM

குண்டாக்கனாய் உழன்று கையில் உண்டு குவி முலையார் தம் முன்னே நாணமின்றி
உண்டி உகந்து அமணே நின்றார் சொல் கேட்டு உடனாகி உழிதந்தேன் உணர்வு ஒன்றின்றி
வண்டுலவு கொன்றையங் கண்ணியானை வானவர்கள் ஏத்தப் படுவான் தன்னை
எண்டிசைக்கும் மூர்த்தியாய் நின்றான் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே

</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">குண்டாக்கன் = மிகுதியான குண்டு உடலை உடையவன்; அமணே நின்று = உடையில்லாமல் நின்று; உழன்று = திரிந்து; குவி முலையார் = குவிந்த முலையை உடைய பெண்கள், இளைய பெண்கள்.</p><p align="JUSTIFY">குண்டாக்கனாய் உழன்று கையில் உண்டு குவி முலையார் தம் முன்னே நாணமின்றி</p><p align="JUSTIFY">உண்டி உகந்து அமணே நின்றார் சொல் கேட்டு உடனாகி உழிதந்தேன் உணர்வு ஒன்றின்றி</p><p align="JUSTIFY">வண்டுலவு கொன்றையங் கண்ணியானை வானவர்கள் ஏத்தப் படுவான் தன்னை</p><p align="JUSTIFY">எண்டிசைக்கும் மூர்த்தியாய் நின்றான் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே</p><p align="JUSTIFY"><strong><br />பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">பருத்த உடலை உடையவனாய், பல இடங்களிலும் திரிந்து கையில் சோற்றினை வாங்கி உண்பவனாக, உடை ஏதும் அணியாமல் இருந்ததற்கு நாணாமல் இளைய பெண்களின் முன்னே சென்று அவர்கள் தரும் உணவினில் நாட்டம் கொண்டவனாக இருந்த நான், உடையினைத் துறந்த சமண துறவிகளின் சொற்களைக் கேட்டு அவர்களுள் ஒருவனாக, அவர்களைப் போன்று அவர்களின் வாழ்க்கை முறைகளை பின்பற்றி, நல்ல உணர்வுகள் ஏதும் இன்றி வாழ்ந்தேன். அவ்வாறு வாழ்ந்த நாட்களில், வண்டுகள் சூழும் கொன்றை மாலையினை அணிந்த சிவபெருமானை, தேவர்களாலும் துதிக்கப்படும் பெருமானை, எண்திசைக்கும் தலைவனாக இருக்கும் மூர்த்தியை, எனது அறிவீனத்தால் இகழ்ந்தேன். எனது செயல் மிகவும் பரிதாபமானது.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.