சொற்றுணை வேதியன் - பாடல் 8
நமது உடல், உயிர் குடிகொண்டிருக்கும் இடம் இல்லம் என்று இங்கே அழைக்கப்படுகிறது.
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
Advertisement
நல்லக விளக்கது நமச்சிவாயவே
</strong></p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">இல் - இல்லம்.</p><p align="JUSTIFY">நமது உடல், உயிர் குடிகொண்டிருக்கும் இடம் இல்லம் என்று இங்கே அழைக்கப்படுகிறது. நமது உடலில் உள்ள மனத்தில் நமச்சிவாய மந்திரம் துதிக்கப்பட்டு ஞானவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டால், நம்மைப் பிணித்திருக்கும் அறியாமை என்ற இருள் விலகுகிறது.</p><p align="JUSTIFY">சிவபிரான் சொற்களுக்குத் துணையாக இருக்கும் நிலை, இதே பதிகத்தின் முதல் பாடலிலும் கூறப்பட்டுள்ளது. அனைத்து உயிர்களுடனும் சிவபிரான் கலந்து இருப்பதால் பல்லக விளக்கு என்று கூறப்பட்டுள்ளது.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">நமச்சிவாய மந்திரம், நமது உள்ளத்தில் ஞான விளக்காக நின்று நம்மைப் பிணைத்திருக்கும் மலங்களை அகற்றும்; சொற்களுக்குத் துணையாக நின்று சொற்களுக்குப் பொருளை அளிக்கும்; என்றும் நிலைத்து நிற்பது; பல்லாயிரக்கணக்கான உயிர்களின் உள்ளே நிற்பது; பக்குவப்பட்ட நிலையில் நின்று பாசங்களை அறுத்த பலரும் காண்பது; நல்ல உள்ளங்களில் வீற்றிருப்பது ஆகும்.</p>