முகப்பு
தினம் ஒரு தேவாரம்

4. மாசில் வீணையும் - பாடல் 2

திருநாவுக்கரசர் தமிழ் மொழியில் நல்ல புலமை பெற்றிருந்தது மட்டுமல்லாமல், வடமொழி, பிராகிருதம்,

Updated On : 23 அக்டோபர், 2015 at 3:01 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:33 PM

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்

நமச்சிவாயவே நானறி விச்சையும்

நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே

Advertisement

நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே
 

விளக்கம்

</p><p align="JUSTIFY">விச்சை = மந்திரம்</p><p align="JUSTIFY">ஞானம் = கல்வியால் விளையும் அறிவு</p><p align="JUSTIFY">திருநாவுக்கரசர் தமிழ் மொழியில் நல்ல புலமை பெற்றிருந்தது மட்டுமல்லாமல், வடமொழி, பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். அத்தகைய புலமை பெற்றிருந்த காரணத்தால் தான் சமண கொள்கைகளை, ஐயம் திரிபறக் கற்று, புத்தர்களுடன் வாது செய்து அவர்களை வெல்லும் திறம் கொண்டிருந்தார். அப்படி இருந்தும், நமச்சிவாய மந்திரம் தான் கற்ற கல்வி என்று கூறுவதிலிருந்து நமச்சிவாய மந்திரத்தினை எவ்வளவு உயர்வாக அவர் மதித்தார் என்பது நமக்கு இங்கே புலனாகின்றது.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">நமச்சிவாய மந்திரமே நான் அறிந்த கல்வியாகும். நமச்சிவாய மந்திரமே அந்த கல்வியால் நான் பெற்ற ஞானமுமாகும். நமச்சிவாய மந்திரம் தான் நான் அறிந்த வித்தையாகும். நமச்சிவாய மந்திரத்தை எனது நா இடைவிடாது சொல்லும். இந்த நமச்சிவாய மந்திரம் தான் வீடுபேற்றை அடையும் வழியாகும்.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.