சொற்றுணை வேதியன் - பாடல் 5
நங்கள் - நாம் அனைவர். வேதத்தின் ஆறு அங்கங்கள், சிட்சை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தம், சோதிடம் ஆகியவை.
வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கெலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக்கு அருங்கலம் திகழும் நீள்முடி
Advertisement
நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">விரதிகள் - விரதங்களை மேற்கொண்டு தவம் செய்து மெய்ப்பொருளை நாடும் முனிவர்கள்.</p><p align="JUSTIFY">வெந்தநீறு - சாம்பல், இங்கே விபூதியைக் குறிக்கும்.</p><p align="JUSTIFY">நங்கள் - நாம் அனைவர். வேதத்தின் ஆறு அங்கங்கள், சிட்சை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தம், சோதிடம் ஆகியவை.</p><p align="JUSTIFY">பலவகையான விரதங்களை மேற்கொண்டு தவம் செய்து மெய்ப்பொருளை நாடும் முனிவர்களுக்கு அழகு சேர்ப்பது, அவர்கள் அணியும் விபூதியாகும்; அந்தணர்க்குப் பெருமை சேர்ப்பது, அவர்கள் நான்மறைகளையும் ஆறு அங்கங்களையும் கற்றுத் தேர்ந்தவராக இருத்தல்; சந்திரனுக்கு அழகு சேர்ப்பது, அவன் சிவபெருமானைச் சரண் அடைந்து அவரது திருமுடியில் இடம் பெற்றிருக்கும் நிலை; சைவர்களாகிய நம் அனைவர்க்கும் பெருமை சேர்க்கும் அணிகலனாக விளங்குவது, நமச்சிவாய மந்திரம் ஆகும்.</p>