சொற்றுணை வேதியன் - பாடல் 6
சலம் - வேறுபாடுள்ள தன்மை. சஞ்சலம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. உள்ளொன்றும் புறமொன்றுமாக உள்ள நிலை.
சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்
நலமிலன் நாள்தோறும் நல்குவான் நலம்
குலமிலர் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர்
Advertisement
நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">சலம் - வேறுபாடுள்ள தன்மை. சஞ்சலம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. உள்ளொன்றும் புறமொன்றுமாக உள்ள நிலை. வேண்டுதல் வேண்டாமை அற்றவன். அனைவருக்கு ஒரே தன்மையாக உள்ளவன்.</p><p align="JUSTIFY">சங்கரன் - இன்பம் அளிப்பவன்.</p><p align="JUSTIFY">சிவபிரானின் நாமத்தைச் சொல்பவர் எத்தன்மையராக இருந்தாலும், கொடுந்தொழில் புரிபவராக இருப்பினும், ஏழு நரகங்கள் செல்ல வேண்டிய பாவங்கள் புரிந்தவராயினும், அவர்களுக்கும் நமச்சிவாய மந்திரம் நன்மையை அளிக்கும் என்று கூறும் சம்பந்தப் பெருமானின் பதிகங்கள், இங்கே நினைவுகூறத் தக்கவை.</p><p align="JUSTIFY">இந்தப் பாடல்கள், சம்பந்தர் அருளிய நமச்சிவாயப் பதிகத்தின் பாடல்கள் (காதலாகிக் கசிந்து என்று தொடங்கும் பதிகம்) ஆகும்.</p><p align="JUSTIFY">கொல்வாரேனும் குணம் பல நன்மைகள்</p><p align="JUSTIFY">இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்</p><p align="JUSTIFY">எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்</p><p align="JUSTIFY">நல்லார் நாமம் நமச்சிவாயவே</p><p align="JUSTIFY">நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்</p><p align="JUSTIFY">உரை செய்வாயினர் ஆயின் உருத்திரர்</p><p align="JUSTIFY">விரவியே புகுவித்திடும் என்பரால்</p><p align="JUSTIFY">வரதன் நாமம் நமச்சிவாயவே</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">அனைவருக்கு ஒரே தன்மையாகக் காணப்படும் சிவபெருமான், தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு எப்போதும் நன்மை செய்பவன்; சிவபிரான், தன்னைச் சாராதவர்களுக்கு நன்மை அளிக்காதவன். நற்குலத்தில் பிறவாதாரும், சிவபிரானின் நாமத்தை ஓதினால், அவர்களுக்கும் நற்குலத்தோர் அடையும் நன்மைகளை அளிப்பவன் சிவபெருமான்.</p>