34. பாளையுடைக் கமுகோங்கி - பாடல் 9
தில்லையில் வாழும் சான்றோர்கள், தங்களது சித்தத்தில் எப்போதும் சிவபிரானின்,
த்தத்து எழுந்த செழுங்கமலத்து அன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்
முத்தும் வயிரமும் மாணிக்கம் தன்னுள் விளங்கிய தூ
Advertisement
மத்த மலர் கண்ட கண் கொண்டு மற்றினிக் காண்பதென்னே
விளக்கம்
மத்த மலர் = ஊமத்தை மலர். இரண்டாவது பாடலில், இறைவனின் திருப்பாதத்து அழகுடன் தொடங்கிய பாதாதி கேச வர்ணனை இந்த பாடலில் முடிவடைகிறது. எனவே ஊமத்தை மலரின் அழகினை குறிப்பிடுவதாக நாம் எடுத்துக்கொள்ளாமல், ஊமத்தை மலர் அணிந்த கேசத்தைக் குறிப்பதாகவே நாம் கொள்ள வேண்டும்.
பொழிப்புரை
தில்லையில் வாழும் சான்றோர்கள், தங்களது சித்தத்தில் எப்போதும் சிவபிரானின், செழுமையான தாமரை போன்ற சேவடிகளை நிலையாக நிறுத்தியுள்ளனர். அவ்வாறு அவர்களது சிந்தையில் வாழும் சிற்றம்பலவனின், முத்து, வயிரம், மாணிக்கம் இவற்றுடன் ஊமத்தை மலரும் பொலிந்து தோன்றும், சடையின் அழகினைக் கண்ட கண்களுக்கு, அதனினும் உயர்ந்த காட்சி வேறு ஏதேனும் உள்ளதோ, இல்லை.