43. கொடுங்கண் வெண்தலை - பாடல் 4
பறை எனப்படும் இசைக்கருவியின் ஓசையும்,
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் மல்கி அயலெலாம்
நிறையும் பூம்பொழில் சூழ் திரு நின்றியூர்
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே
விளக்கம்
பறை = ஒரு வகையான தோற்கருவி. அயலெல்லாம் = ஊர்ப் புறங்களில், திருக்கோயிலிலும் கோயிலைச் சூழ்ந்த வீதிகளிலும் எழுகின்ற ஓசை, ஊர்ப் புறங்களில் கேட்கின்றது என்று கூறுவதன் மூலம், மிகவும் அதிகமான மக்கள் பறைக்கருவியை முழக்குவதிலும், இசைப் பாடல்கள் பாடுவதிலும், வேதங்கள் ஓதுவதிலும் ஈடுபட்டனர் என்பதை அப்பர் பெருமான் நமக்கு உணர்த்துகின்றார்.
Advertisement
பொழிப்புரை
மிகவும் அதிகமான மக்கள் பங்கெடுத்துக் கொண்டு எழுப்பும் பறை எனப்படும் இசைக்கருவியின் ஓசையும், இறைவைனைக் குறித்து பாடப்படும் பாடல்களின் ஓசையும், மறைகளின் ஓசையும் கலந்து ஒலிக்கின்ற பொழில்கள் சூழ்ந்த திருநின்றியூர் ஈசனை எனது உள்ளம் எண்ணுகின்றது.