57. பாறலைத்த படுவெண் - பாடல் 3
கொடுமையானதும் வலிமை வாய்ந்ததும்
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:40 PM
பரவி நாளும் பணிந்தவர் தம் வினை
துரவையாகத் துடைப்பவர் தம்மிடம்
குரவம் நாறும் குழல் உமை கூறராய்
அரவம் ஆட்டுவர் போல் அன்னியூரரே
விளக்கம்
துரவை = இல்லாததாக. குரவம் = குரவம் எனப்படும் மலர். பரவி = போற்றிப் புகழ்ந்து.
Advertisement
பொழிப்புரை
நாள்தோறும் தன்னைப் போற்றிப் புகழ்ந்து வணங்கும் அடியார்கள்மேல் படர்ந்துள்ள கொடுமையானதும் வலிமை வாய்ந்ததும் ஆகிய வினைகளை, ஒன்றும் இல்லாமல் போக்கும் கருணை உள்ளத்தவரும், குரவ மலரின் நறுமணம் வீசும் கூந்தலை உடைய உமை அம்மையைத் தனது உடலில் ஒரு பாகமாக கொண்டவரும், பாம்பினை தனது இடுப்பினில் கட்டி தனது விருப்பம் போன்று ஆடச் செய்பவரும் ஆகிய பெருமான் அன்னியூர் தலத்து இறைவர் ஆவார்.