முகப்பு
தினம் ஒரு தேவாரம்

57. பாறலைத்த படுவெண் - பாடல் 7

வெண்மை நிறத்தில் உள்ளதும்

Updated On : 6 ஏப்ரல், 2017 at 5:53 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:40 PM

ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்
வானை வானவர் தாங்கள் வணங்கவே
தேனை ஆர் குழலாளை ஒர் பாகமா
ஆனை ஈருரியார் அன்னியூரரே
 

விளக்கம்

முதல் அடியின் கடைசியில் வரும் உழல் என்ற சொல்லினை அடுத்த அடியின் முதற் சொல்லுடன் சேர்த்து உழல்வானை என்று பொருள் கொள்ள வேண்டும்.

Advertisement

பொழிப்புரை

தசைப்பற்று கொண்டதும் வெண்மை நிறத்தில் உள்ளதும் ஆகிய பிரமனின் தலையில் பலி கொள்வதற்காக ஊரெல்லாம் திரியும் பெருமானை வானவர்கள் வணங்குகின்றார்கள். தேன் போன்று இனிய குரலினை உடைய உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுள்ள பெருமான், குருதி சொட்டும் யானையின் தோலை போர்வையாகத் தனது உடலின் மீது போர்த்தவர் ஆவார். அவர்தான் அன்னியூர் தலத்தில் உறைகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.