72. பாசம் ஒன்றிலராயினும் - பாடல் 2
விதித்துள்ள வழிமுறை
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:13 PM
பாடல் 2:
மறையின் நாண்மலர் கொண்டு அடி வானவர்
முறையினால் முனிகள் வழிபாடு செய்
இறைவன் ஈசன் எம் பெருமான் இடை மருதினில்
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே
விளக்கம்:
மறையின்=மறைகளில் விதித்துள்ள வழிமுறையின் வழியே; உள்குதல்=நினைத்தல்; ஈசன்= தலைவன்;
பொழிப்புரை:
மறைகளில் சொல்லப்பட்டுள்ள முறையின் வழியே, தேவர்களும் முனிவர்களும் அன்று அலர்ந்த மலர்களை, இறைவனின் மீது தூவி வழிபாடு செய்கின்றார்கள். அவ்வாறு கொண்டாடப்படும் இறைவனை, எனது பெருமானை, எல்லோர்க்கும் தலைவனாக விளங்குபவனை, இடைமருது தலத்தில் உறையும் இறைவனை, எனது உள்ளம் எப்போதும் நினைக்கும்.