82. காலை எழுந்து கடிமலர் - பாடல் 2
சடையில் உள்ள வெண்தலை
பாடல் 2:
வண்டணை கொன்றையும் வன்னியும்
மத்தமும் வாளரவும்
கொண்டு அணைந்தேறு முடி உடையான்
குரை சேர் கழற்கே
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை
உறைவார் சடை மேல்
வெண்டலை மாலை அன்றோ எம் பிரானுக்கு
அழகியதே
விளக்கம்:
தொண்டு=தொண்டர்கள், அடியார்கள்: குரைசேர் கழல்=சிலம்புகள் அணிந்ததால் ஒலி எழுப்பும் பாதங்கள்.
பொழிப்புரை:
புதுமலர்களாக காணப்படுவதால் வண்டுகள் தங்கும் தன்மை படைத்த கொன்றை மாலையினையும், வன்னி, ஊமத்தை மலர்களோடு, ஒளி வீசும் பாம்பினையும் தனது சடையில் அணிந்து காணப்படுபவர் சிவபெருமான் ஆவார். சிலம்புகள் ஒலியெழுப்பும் அவரது திருவடிகளை அடியவர்கள் வணங்குகின்றார்கள். அத்தகைய பெருமை வாய்ந்த சிவபெருமான் சோற்றுத்துறையில் உறைகின்றார். அவரது நீண்டு அழகாக காணப்படும் சடையில் உள்ள வெண்தலை மாலை சிவபெருமானுக்கு மேலும் அழகினைச் சேர்க்கின்றது.
Advertisement