முகப்பு
தினம் ஒரு தேவாரம்

80. ஒன்று கொலாம் - பாடல் 9

பூதப் படையினர்

Updated On : 30 நவம்பர், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:44 PM

பாடல் 9:

    ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன 
    ஒன்பது போல் அவர் மார்பினில் நூலிழை
    ஒன்பது போல் அவர் கோலக் குழற்சடை
    ஒன்பது போல் அவர் பாரிடம் தானே


விளக்கம்:


பாரிடம் என்பதற்கு அகன்ற பூமி என்று பொருள் கொண்டு, அவர் படைத்த பூமியின் கண்டங்கள் ஒன்பது என்றும் விளக்கம் கூறுவார்கள். நவகண்ட பூமிப் பரப்பு என்று தாயுமானவர் ஒரு பாடலில் குறிக்கின்றார்.  

பொழிப்புரை:

சிவபெருமான் நமது உடலுக்கு வைத்துள்ள வாசல்கள் ஒன்பது, அவை இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு நாசித் துவாரங்கள், வாய், கருவாய், எருவாய் ஆகியவை. அவர் தமது திருமார்பில் அணிந்துள்ள பூணூலின் இழைகள் ஒன்பது. (முப்புரி நூல் எனப்படும்). அவரது அழகிய சடைகளின் எண்ணிக்கை ஒன்பது. அவரிடம் பணி செய்யும் பூதப் படையினர் ஒன்பது வகையினர் ஆவார்கள்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.