முகப்பு
தினம் ஒரு தேவாரம்

93. மடையில் வாளைபாய - பாடல் 9

உறையும் பிரமனும்

Updated On : 2 மே, 2018 at 9:53 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:09 PM


பாடல் 9:

    நாற்றம் மலர் மேல் அயனும் நாகத்தில்
    ஆற்றல் அணை மேலவனும் காண்கிலாக்
    கூற்றம் உதைத்த குழகன் கோலக்கா
    ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே

விளக்கம்:

நாற்றம்=நறுமணம்;

Advertisement

பொழிப்புரை:

நறுமணம் மிகுந்த தாமரை மேல் உறையும் பிரமனும், ஆற்றல் மிகுந்த ஆதிசேஷனை படுக்கையாகக் கொண்டு கிடக்கும் திருமாலும் காண இயலாமல் நின்றவனும், காலனை உதைத்து வீழ்த்தியவனும், அழகும் இளமையும் ஒருசேர பொருந்தி திகழ்பவனும் ஆகிய இறைவன் திருக்கோலக்கா தலத்தில் உறைகின்றான்; எருதினை வாகனமாகக் கொண்டுள்ள அந்த இறைவனின் திருவடிகளைப் போற்றி வாழ்வீர்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.