முகப்பு
தினம் ஒரு தேவாரம்

93. மடையில் வாளைபாய - பாடல் 10

கோலக்காவில் உறையும்

Updated On : 2 மே, 2018 at 9:53 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:09 PM

பாடல் 10:

    
பெற்ற மாசு பிறக்கும் சமணரும்
    உற்ற துவர் தோய் உருவிலாரும்
    குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
    பற்றி பரவப் பறையும் பாவமே

விளக்கம்:

பெற்ற மாசு=நீராடுதளைத் தவிர்ப்பதால், சுற்றுப்புறத்திலிருந்து உடலுக்கு ஏறிய அழுக்குகள்; பிறக்கும்=தோன்றும்; 
 
பொழிப்புரை:

நீராடுவதைத் தவிர்ப்பதால் தங்களது உடலினில் சேரும் அழுக்குகளுடன் தோன்றும் சமணர்களும், துவராடையினால் தங்களது உடல் முழுவதையும் மறைத்துக் கொள்ளும் புத்தர்களும், குறைகள் உடைய சமய நெறிகளை மேற்கொண்டு உள்ளதால், அவர்கள் கோலக்காவில் உறையும் இறைவனை, தங்களது தெய்வம் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; அவர்களை பார்த்து தவறான வழியில் செல்லாமல்; நீங்கள் கோலக்கா இறைவனைப் பற்றிக்கொண்டு போற்றி வழிபட, உங்களது பாவங்கள் தீர்ந்துவிடும்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.