101. நின்று மலர் தூவி - பாடல் 9
பிரமன் மற்றும் திருமால்
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:38 PM
பாடல் 9:
இருவர் அறியாத
ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள்
பெருகி நிகழ்வோரே
விளக்கம்:
Advertisement
இருவர்=திருமால் மற்று பிரமன். இறைவன் பால் அன்பினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பதிகத்தின் நான்காவது பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர், இந்த பாடலில் அத்தகைய அன்பு நமது உள்ளத்தினை உருக்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்.
பொழிப்புரை:
பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் அறிய முடியாத வண்ணம் நீண்ட நெடுந்தழலாக நின்ற ஒப்பற்ற முதுகுன்றத்து இறைவனை, தங்களது மனம் உருக நினைக்கும் அடியார்கள் பலவகையான பேறுகள் பெற்று வாழ்வார்கள்.