101. நின்று மலர் தூவி - பாடல் 10
புத்தர்களும் சமணர்களும்
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:38 PM
பாடல் 10:
தேரர் அமணரும்
சேரும் வகை இல்லான்
நேரில் முதுகுன்றை
நீர் நின்று உள்குமே
விளக்கம்:
Advertisement
உள்குதல்=தியானித்தல்; தேரர்=புத்தர்; நேரில்=நேர்+இல், ஒப்பில்லாத
பொழிப்புரை:
புத்தர்களும் சமணர்களும் தங்களது வினைப்பயனால் பெருமானைச் சென்று அடைய முடியாமல் நிற்கின்றனர்; அத்தகைய தீவினைகள் இல்லாதவராகிய நீங்கள் ஒப்பில்லாத முதுகுன்றத்து இறைவனை கண்டு வணங்கி அவனை குறித்து தியானம் செய்வீர்களாக.