102. முரசதிர்ந்து எழுதரு - பாடல் 3
பெருமானைப் போன்று
பாடல் 3:
முழவு அமர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய
மழவிடை அது உடையீரே
மழவிடை அது உடையீர் உமை வாழ்த்துவார்
பழியொடு பகை இலர் தாமே
விளக்கம்:
Advertisement
இடபம், ஊர்தியாகவும் கொடியில் உள்ள இலச்சினையாகவும் இருக்கும் இரண்டு நிலைகளையும் உணர்த்தும் பொருட்டு உடையீர் என்று பொதுவாக கூறுகின்றார். இம்மையில் ஏற்படும் பழியினால் மறுமையில் அந்த உயிர்களுக்கு இடையில் பகை வரும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது என்ற விளக்கம் அளிக்கப் படுகின்றது. பகை என்ற சொல்லுக்கு பாவம் என்ற பொருளும் சிலரால் கூறப்பட்டு விளக்கம் அளிக்கப் படுகின்றது. முழவு=மத்தளம் போன்ற இசைக்கருவி. மழவிடை=இளமையான இடபம், பெருமானைப் போன்று என்றும் இளமையுடன் இருப்பது இடபம்.
பொழிப்புரை:
முழவம் எனப்படும் இசைக்கருவி ஒலிக்கப் படுவதும், சோலைகள் சூழ்ந்ததால் அழகினை உடையதாக இருப்பதும் ஆகிய முதுகுன்றம் தலத்தில் பொருந்தி உறையும் இறைவரே, இளமையான காளையைத் தமது வாகனமாக உடையவரே, இளமை வாய்ந்த இடபத்தினை வாகனமாக உடைய உம்மை வாழ்த்தி பாடும் அடியார்கள் பழிகளும், பழிகளால் ஏற்படும் பகைகளும் இல்லாதவர்களாக இருப்பார்கள்.