முகப்பு
தினம் ஒரு தேவாரம்

103. தேவா சிறியோம் பிழையை  - பாடல் 6

இறைவன் உறையும்

Updated On : 27 ஜூலை, 2018 at 10:53 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:45 PM


பாடல் 6:

    வம்பார் கொன்றை வன்னி மத்த மலர் தூவி
    நம்பா என்ன நல்கும் பெருமான் உறை கோயில்
    கம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்து எங்கும்
    மொய்ம்பார் சோலை வண்டு பாடு முதுகுன்றே

விளக்கம்:

Advertisement

வம்பு=நறுமணம்; மொய்ம்பு=நெருக்கம்;

பொழிப்புரை:

நறுமணம் நிறைந்த கொன்றை வன்னி ஊமத்தை முதலிய மலர்களை தனது திருமேனியின் மீது தூவி, நம்பா என்று தன்னை அழைத்து தொழும் அடியார்களுக்கு தனது அருளினை நல்கும் பெருமானாகிய இறைவன் உறையும் திருக்கோயில் உடைய தலம், கிளைகளை உடைய குரா மரமும் கொகுடி முல்லை கொடிகளும் எங்கும் பரந்து வளர்வதால் நெருக்கமாக உள்ளதும் வண்டுகள் இடைவிடாது பாடுவதும் ஆகிய சோலைகள் உடையதும் ஆகிய முதுகுன்றம் ஆகும்.     


பாடல் 7:
திகத்தின் ஏழாவது பாடல் சிதைந்தது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.