முகப்பு
தினம் ஒரு தேவாரம்

103. தேவா சிறியோம் பிழையை  - பாடல் 8

அரசனாகிய இராவணன்

Updated On : 28 ஜூலை, 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:45 PM

பாடல் 8:

    வாசம் கமழும் பொழில் சூழ் இலங்கை வாழ் வேந்தை
    நாசம் செய்த நங்கள் பெருமான் அமர் கோயில்
    பூசை செய்து அடியார் நின்று புகழ்ந்து ஏத்த
    மூசி வண்டு பாடும் சோலை முதுகுன்றே

விளக்கம்:

Advertisement

மூசி=ஒலி, மூசி வண்டு=மலர்களை மொய்க்கும் போது ரீங்காரமிட்டு ஒழி எழுப்பும் வண்டுகள்;

பொழிப்புரை:

நறுமணம் கமழும் சோலைகள் நிறைந்த இலங்கைக்கு அரசனாகிய இராவணன், மலையின் கீழே அமுக்குண்டு அல்லலுறும் வண்ணம் நாசம் செய்த எங்களது பெருமானாகிய இறைவன் உறையும் திருக்கோயில், பூஜைகள் செய்து பெருமானின் அடியார்கள் அவனது புகழினை போற்ற விளங்குவதும், ரீங்காரமிட்டு ஒலி எழுப்பிய வண்ணம் வண்டுகள் பூக்களை மொய்க்கும் சோலைகள் உடையதும் ஆகிய முதுகுன்றம் தலமாகும்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.