முகப்பு
தினம் ஒரு தேவாரம்

99. ஆடினாய் நறுநெய்யொடு - பாடல் 8

காளி தேவி

Updated On : 14 நவம்பர், 2018 at 4:48 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:29 PM

பாடல் 8:

    வேயினார் பணைத் தோளியொடு ஆடலை வேண்டினாய்
        விகிர்தா உயிர்கட்கு அமுது
    ஆயினாய் இடுகாட்டு எரி
        ஆடல் அமர்ந்தவனே    
    தீயினார் கணையால் புரம் மூன்று எய்த செம்மையாய்
         திகழ்கின்ற சிற்றம்பலம்
    மேயினாய் கழலே தொழுது எய்துதும் மேல் உலகே 

விளக்கம்:

Advertisement

வேயின்=மூங்கில் போல்; ஆர்=பொருந்திய; பணைத்தோளி=திரண்ட தோள்களை உடைய உமை அன்னை; 

பொழிப்புரை: 

மூங்கில் போன்று பருத்து திரண்டு அழகிய தோள்களை உடைய காளி தேவியுடன் நடனம் ஆடுவதை விரும்பியவனே, ஏனைய தேவர்களிடமிருந்து மாறுபட்டவனே, உயிர்களுக்கு அமுதமாக பல நன்மைகளை செய்பவனே, இடுகாட்டின் தீயினில் உகந்து நடனம் ஆடுபவனே, தீக்கடவுளை கூர்மையான முனையாகவும் திருமாலினைத் தண்டாகவும் காற்றினை சிறகுகளாகவும் கொண்ட அம்பினை எய்தி பறக்கும் மூன்று கோட்டைகளையும் தீ மூட்டி அழித்தவனே, அழகுடன் சிறந்து விளங்கும் சிற்றம்பலத்தினை திருநடனம் ஆடும் அரங்காகக் கொண்டவனே, உனது திருப்பாதங்களைத் தொழும் அடியார்கள் மேலான உலகமாகிய சிவலோகத்தினை அடைவார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.