முகப்பு
தினம் ஒரு தேவாரம்

134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 6

சிவபெருமான்

Updated On : 11 ஜூலை, 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 2:59 PM

பாடல் 6:

    தெரிந்து இலங்கு கழுநீர் வயல் செந்நெல்
    திருந்த நின்ற வயல் சூழ் திருப்புன்கூர்
    பொருந்தி நின்ற அடிகள் அவர் போலும்
    விரிந்து இலங்கு சடை வெண்பிறையாரே

விளக்கம்:

Advertisement

தெரிந்து இலங்குதல்=மிகுந்த ஒளியுடன் கூடி இருத்தல்;
 
பொழிப்புரை:

மிகுந்த ஒளியுடன் கூடிய செங்கழுநீர் பூக்கள் மலரும் வயல்களும், ஒரே சீராக உயர்ந்து வளர்கின்ற நெற்கதிர்கள் நிறைந்த வயல்களும் சூழ்ந்த திருப்புன்கூர் தலத்தில் நிலையாக பொருந்தி உறைபவர் சிவபெருமான். அவர் தனது விரிந்த சடையில் வெண்மை நிறத்தில் உள்ள பிறைச் சந்திரனை அணிந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.