காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். இலங்கை காரைநகர் கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
மேலும் மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தது. பின்னர் கைதான 12 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பிறகு மீனவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
Advertisement
Advertisement
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாக உள்ளது. எல்லைத்தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி ராமேஸ்வரம், நாகை, புதுக்கோட்டை மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படுகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
The Sri Lankan Navy arrested 12 fishermen from Karaikal for fishing across the border.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.